சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 14 பேர் மாத்தறையில் கைது!!

740

A6

மாத்தறை, திக்வெல்லயிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட நீர்கொழும்பு, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 14 பேரை மாத்தறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வான் ஒன்றில் இவர்கள் திக்வெல்லைப் பிரதேசத்துக்கு வந்துள்ளதாகவும், வான் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.