மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்தேக்கத்தின் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீா்தேக்கங்களின் நீா்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கிச்செல்லகூடிய அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனா்.
இதேவேளை காசல்ரீ நீா்தேக்கத்திலும் நீரீன் மட்டம் உயா்ந்துள்ளது. மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக 1 மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
எனினும் அதன் பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்ட பின் போக்குவரத்து வழமைக்கு மாறியது. தொடா்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவிக்கின்றார்.