ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ” கவிதைப்பட்டறையும் கவிச்சமரும் ” எனும் நிகழ்வு கடந்த 22.12.2014 நடைபெற்றுள்ளது. பிரதம விருந்தினராக முல்லைமாட்ட அரச அதிபர் திரு வேதநாயகம் கலந்து கொண்டார்.
அத்துடன் துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் குருபரனின் ஒழுங்கமைப்பில் கலாசார உத்தியோகத்தர் பிரதீபன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
கவியரங்கம் மற்றும் கவிச்சமருக்கு பண்டிதர் பிரதீபன் தலைமைதாங்க.. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவிப்பதிவாளர் ரௌசி, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் வினோத், மற்றும் சைவப்புலவர் திலகானந்தம், வன்னியுர் செந்தூரன், முல்லைத்தீபன் ஆகியோர் வழங்கினர்.
கவிச்சமரை வன்னியுர் செந்தூரனும் முல்லைத்தீபனும் முழக்கினர். தொடர்ந்து நடந்த பட்டிமன்றத்திற்கு துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன் தலைமை தாங்கினார். செயலக உத்தியோகத்தர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் மத்தியில் சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் நன்றியுரையினை பிரதேச செயலக கணக்காளர் சோ.பிரபு வழங்கி நிகழ்வை நிறைவு செய்திருந்தார்.