பதுளை மண்சரிவில் ஐவர் பலி, 14 பேர் மாயம்!!

476

Badulla

பதுளை ரில்பொல என்னும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. வீடுகளின் மீது பாரியளவில் மண் சரிந்து வீழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட பெண் தாதியொருவர் தம்மை காப்பாற்றுமாறு வெளியில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அடிக்கடி அழைப்பினை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதி ஒருவரே இவ்வாறு உதவி கோரி வருகின்றார். இராணுவத்தினரும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.