வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

466

VVV

வாழ்வின் எழுச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியா – செட்டிகுளம் – முதலியாகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று(26.12) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வாழ்வின் எழுச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் பயனாளிகள் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட மக்கள், அவை ரிஷாட் பதியூதினின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டதாகவும் செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் முறையீடு செய்தனர்.

அந்த நிதியை உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த முறைகேடுகள் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட நிதியை ஒரு வாரத்திற்குள் பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

– நன்றி அத தெரன-