வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய பரிபாலன சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சுனாமி பேரவல 10 ம் ஆண்டு நிறைவு ஆத்மா சாந்தி பூசையும் விசேட பிரார்த்தனையும் உலகத்தில் சுனாமி அனர்த்தத்தில் மரணித்த அத்தனை உறவுகளுக்குமாய் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ பிரபாகரகுருகளின் நெறிபடுத்தலில் அந்தணர் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்களின் தலைமையில் இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் சிவஸ்ரீ கந்தசாமி குருக்கள், சிவஸ்ரீ திவாகரகுருக்கள் உட்பட சிவாசாரியர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் கௌரவ தியாகராசா, இந்திரராசா அவர்களும், சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், ஆலய பரிபாலன சபை தலைவர் தில்லைநாதன், உபதலைவர் தமிழருவி சிவகுமாரன், பரிபாலனசபை உறுப்பினரும் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன்) கவிஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மோட்ச தீப ஏற்றலுடன் பூசையும் பிரார்த்தனையும் ஆரம்பமாகி பின்னர் பூசை இடம்பெற்றது. விசேட பூசை நிகழ்வுகளை சிவஸ்ரீ கந்தசாமி குருக்கள் நடத்தி வைத்தார்
பூசையின் பின்னர் மரணித்த உறவுகளுக்காய் 108 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது .
அதன் பின்னர் சிவஸ்ரீமுத்து ஜெயந்திநாத குருக்கள் உட்பட்ட சிவாசாரியார்கள் பிரமுகர்களின் இரங்கலுரைகளும் இடம் பெற்று பிராத்தனை நிறைவு பெற்றது
அதன் பின்னர் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள சுனாமி பேரவல நினைவு தூபிக்கு வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ தியாகராசா, கௌரவ இந்திரராசா மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோரால் மலரஞ்சலி செலுத்தி நினைவு கூறபட்டமையும் குறிப்பிடத்தக்கது.