அனந்தி வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!!

303

Ananthi

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ். தொல்புரத்தில் உள்ள அனந்தியின் வீட்டின் மீது இன்று (06.01) அதிகாலை 1.30 மணியளவில் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பிய போது அயலவர்கள் விழித்துக்கொண்டு தமது வீட்டு மின்குமிழ்களை ஒளிரவிட்ட போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு அனந்தி அறிவித்ததை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு சென்றுள்ளனர்.