வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர் பாராட்டு விழா!!

345

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர் கலாபூஷணம் விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள அந்தணர் ஒன்றிய குருகுல கட்டடத்தில் சிவஶ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

கலாபூஷணம் வீராச்சாமி குழுவினரின் மங்கள இசையைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வேத தேவார பாராயணமும் நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

சிவஶ்ரீ.க.கந்தசாமிகுருக்கள், ப.சிவானந்த சர்மா, மு.பத்மநாபசர்மா, ஶ்ரீமதி ஞா.ஞானலட்சுமி, பண்டிதை யோகலட்சுமி, ஐ.புவனநாயகி, மு.குமாரசிங்கம், ஆ.பத்மநாதன், ந.சுப்பிரமணியம், இ.சுப்பிரமணியம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய உறுப்பினர்கள், பங்கு தந்தை செ.ஜெஸ்ரின், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, தமிழ்மணி அகளங்கன், கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், இந்து ஆலயங்களின் நிர்வாகசபையினர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வுகளை ஒன்றிய செயலாளர் சிவஶ்ரீ நா.பிரபாகரக் குருக்கள் நெறிப்படுத்தினர்.

 11 12 13 14 15 16