வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் அனுப்பி வைப்பு!!

388

ஜனாதிபதி தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 134 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 109,705 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 15 வவுனியா மாவட்ட செயலகத்தில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2,750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டள்ளனர்.

அத்துடன், இம்முறை வவுனியா மாவட்டத்தில் 8,364 பேர் தபால் மூலமாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி 10,4252 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம் முறை 5453 வாக்காளர்களின் பெயர்கள் மேலதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1 2 3 4 5 6