ஏர் ஏசியா விபத்தில் இதுவரை 37 சடலங்கள் மீட்பு!!

257

ஏர் ஏசியா விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ள சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் சென்றுள்ளனர்.

கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 37 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 25 உடல்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

A1 A2