வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீது கைக்குண்டுத் தாக்குதல்!!

644

Nelu
இலங்கையின் 7வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நாடு முழுவதும் இறுதிகட்ட வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

வவுனியாவிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன் நிலையில் சற்று முன்னர் 2.40 மணியளவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தின் மீது இனந்தெரியாத நபர் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.