காலையிலேயே சுறுசுறுப்பாக ஜனாதிபதி வேட்பாளர்களான மகிந்த, மைத்திரி இருவரும் வாக்களிப்பு!(படங்கள், வீடியோ)

428

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

7வது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தர் வாக்களித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற அமைச்சர் அவர்கள் தமது வாக்கை பதிவு செய்துள்ளார் .

vote_mahi_my3_001vote_mahi_my3_002

mahintha_vote_002

1555444_927796327254999_4325724743577605758_n