வாக்களிப்பின் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் (படங்கள் வீடியோ )

395

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இன்று காலையிலேயே வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரிலும், எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் வடமராட்சிக்கிழக்கு குடத்தனையிலும் வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்திலும் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார் .

குறிப்பாக இன்றைய தினம் 12 மணிவரை மாவட்டத்தில் 20வீத வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்..

இதேவேளை மக்களின் வாக்களிப்பு வீதம் மற்றும் குறைவடைந்திருக்கவில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. மேலும் யாழ்.கொல்லங்கலட்டி பகுதி யில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா மற்றும் இருபாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் வாக்களிப்புச் செய்திருக்கின்றனர். வாக்களிப்பின் பின்  பத்திரிகையாளர்களை  சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்  தேர்தல் தெரிவத்தாட்சி  அலுவலகர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் இன்று இடம்பெறும் வாக்களிப்பு தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் தெரிவித்த கருத்துக்கள் காணொளி வடிவில்

sri_sumanthiran_002

12