வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீதும் கைக்குண்டுத் தாக்குதல்!!

429

vttm

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் வாக்குச் சாவடிக்கு அண்மையில் சற்றுமுன்னர் 4.00 மணியளவில் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி கைக்குண்டு வெடிக்காததினால் சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், அப்பிரதேசம் எங்கும் பதட்டநிலை காணப் படுகின்றது. அத்துடன் மேற்படி குண்டை செயலிழக்க செய்ய, பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப் பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த வாக்கு சாவடியில் இருந்து வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.