வவுனியா மாவட்டத்தில் 72,618 (66%) பேர் வாக்களிப்பு : ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்!!(படங்கள், வீடியோ)

509

வவுனியாவில் 72,618 பேர் (66%) வாக்களித்துள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் வவுனியா மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர். அமைதியான முறையில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

வவுனியா மாவட்டத்தின் 134 நிலையங்களில் வாக்குகள் பதிவு நடைபெற்றதுடன் இம்முறை தேர்தலில் வாக்களிக்க 109705 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி-

வவுனியா – 65%
யாழ்ப்பாணம் – 58%
கிளிநொச்சி – 64%
முல்லைத்தீவு – 73%
மன்னார் 68%

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையத்திலிருந்தும் வாக்கு பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந் நிலையில் 15 வாக்குஎண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6 நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் எண்ணப்படவுள்ளது.

தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்..

v1v2 v3v4 v5