பாலியல் குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது!!

384

Husain

பங்களாதேஷத்தின் முன்னணி கிரிக்கெட் வீரரான ருபெல் ஹொசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது பெண்தோழியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கில் அவரை திருமணம் செய்துகொள்வதாக போலியாக உறுதியளித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப்படியானக் குற்றச்சாட்டை அவரது முன்னாள் பெண் தோழியும் திரைப்பட நடிகையுமான நஸ்னீன் அக்தர் ஹாப்பி சுமத்தியுளார்.

பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கில் திருமணம் செய்துகொள்வதாக உத்தரவாதம் அளித்து ஏமாற்றுவது பங்களாதேஷ சட்டத்தின்படி பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.

அடுத்த மாதம் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியில் அவர் இடம்பெறுகிறார்.

ஆனால் அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரால் அப்போட்டியில் பங்கேற்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.