மைத்திரியின் தேர்தல் வாக்குறுதிகள்! மாறுமா இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைதரம் !

407

100day_ms_rw-600x659

இலங்கையின் புதிய ஜனாதிபதி அறிவித்துள்ள  தேர்தல்  வாக்குறுதிகளால்  மாறுமா இலங்கை மக்களின் வாழ்க்கை தரம்  என அங்கலாய்க்கும்  பொதுமக்கள் ..

தேர்தல் வாக்குறுதிகள் 

1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல்.

2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசா­தா­ர­ணத்­திற்கு உள்­ளான அரச ஊழி­யர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்­க­ளுக்கும் நிவாரணம் வழங்குதல்.

3. அர­சியல் அடிமை வேலை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பட்­ட­தா­ரி­களை அரச சேவைக்கு உள்­ளீர்த்து அவர்­களின் தகை­மை­க­ளுக்கு ஏற்ற பதவி உயர்வு திட்­டத்தை ஏற்­ப­டுத்தல்.

4. ஓய்­வூ­தி­ய­தா­ரர்­களின் வேற்­று­மையை அகற்றும் வகையில் அவர்­க­ளுக்கு 3500 ரூபா மாதாந்த மேல­திக கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுத்தல்.

5. அரச வங்­கி­களில் உள்ள சிரேஷ்ட பிர­ஜை­களின் நிலை­யான வைப்­புக்­களில் முதல் 10 இலட்­சத்­திற்­காக செலுத்­தப்­ப டும் வட்டியை 15% வரை அதி­க­ரித்தல்.

6. சமுர்த்தி கொடுப்­ப­னவை அதி­கப்­பட்சம் 200 ரூபா வரை அதி­க­ரித்தல்.

7. குழந்­தையை பிர­ச­விக்கும் அனைத்து தாய்­மா­ருக்கும் போச­ணை­மிகு உணவை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக 20000 ரூபா வரை­யான கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுத்தல்.

8. அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்கள் பத்­துக்­காக அறவி­டப்­படும் அதிக வரியை அகற்றி விலையை குறைத்தல். அதற்கு இணை­யா­க­ அத்­தி­யா­வ­சிய உணவு உற்­பத்­தியில் ஈடு­பட்­டுள்ள உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுத்தல்.

9. எரி­பொ­ருட்­க­ளினால் அரசு அற­விடும் 4000 கோடிக்கும் அதி­க­மான வரியை அகற்றி, எரிப்­பொ­ருட்­களின் விலையை குறைத்து அதன் பலனை பொது மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்தல்.

10. போக்­கு­வ­ரத்து கைத்­தொ­ழி­லுக்கு தேவை­யான ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு பெற்­றுக்­கொ­டுத்து அரசு மற்றும் தனியார் துறையின் பொது போக்­கு­வ­ரத்து சேவையின் வினைத்­தி­றனை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்தல்.

11. வீட்டு கேஸ் சிலின்­டரின் விலையை 300 ரூபாவால் குறைத்தல்.

12. நெல் கொள்­வ­ன­வுக்­கான உத்­த­ர­வாத விலை ஒரு கிலோ­வுக்கு50 ரூபா வரை அதி­க­ரித்தல்.

13. உரு­ளைக்­கி­ழங்கு ஒரு­கி­லோ­வுக்­கான கொள்­வ­ன­வுக்­கான உத்­த­ர­வாத விலை 80 ரூபா வரை அதி­க­ரித்தல்.

14. பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோ­ வுக்கு 80 – -90 ரூபா வரை­யான மிதக்கும் விலையை பேணுதல்.

15. இறப்­ப­ருக்கு 350 ரூபா மிதக்கும் விலையைப் பேணுதல்.

16. பாற்­பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு ஒரு லீற் றர் பாலுக்கு தற்­போது செலுத்­தப்­படும் 60 ரூபா உத்­த­ர­வாத விலையை 10ரூபா­வால் அதி­க­ரித்தல்.

17. அனைத்து விவ­சாய கடன்களையும் 50%த்தால் கழித்து செலுத்தவுள்ள மிகுதி தொகையை மீளாய்வு செய்து செலுத் துவதற்கு சலுகைக்­காலம் வழங்­குதல்.

18. தற்­போது வழங்­கப்­படும் மண்­ணுக்கும் பயிர்ச்­செய்­கைக்கும் மனி­த­னுக்கும் தீங்கு விளை­விக்கும் தரம் குறைந்த உரத்­திற்­காக உயர் நிலை­யி­லான மற்றும் தரத்­தி­லான உரத்தை வழங்­குதல்.

19. தற்­போது வழங்­கப்­படும் தரம் குறைந்த உரத்­திற்குப் பதிலாக தரத்­தி­லான உரத் தை சிறிய தேயிலை தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்தல்.

20. நடுக்­க­டலில் உயி­ரி­ழக்கும் மீன­வ­ருக்­காக பத்து இலட்சம் வரை­யான காப்­பு­று­தி­யினை அரச பங்­க­ளிப்­புடன் பெற்­றுக்­கொ­டுத்தல்.

21. விவ­சா­யி­க­ளுக்கு பயிர்­சேத காப்­பு­று­தி­யினை அரச பங்­க­ளிப்­புடன் பெற்­றுக்­கொ­டுத்தல்.

 

22. விவ­சாய,மீனவ சமூ­கத்­திற்­காக புதிய ஓய்­வூ­திய சம்­பள திட்­டத்தை ஆரம்­பித் தல்.

23. முச்­சக்­கர வண்டி சார­திகள், மேசன் அல்­லது தச்சு, சிறிய வர்த்­தகம் உள்­ளிட்ட தொழிற்­று­றை­களில் ஈடு­பட்டுள் ­ள­வர்­க­ளுக்­காக ஓய்­வூ­திய திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.

24. வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழி­யர்­க­ளுக்கு ஓய்­வூ­திய திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல் மற்றும் அவர்­களின் இந்­நாட்டு வதி­யாதோர் கணக்­குக்கு 2.5% வட்­டி­யினை தற்­போது வழங்­கப்­படும் வட்டி வீதத்­திற்கு சேர்த்தல்.

25. மத்­திய கிழக்கு உள்­ளிட்ட வெளிநா­டு­களில் தொழில் புரியும் இலங்­கை­யர்­ களின் குடும்­பத்தை பார்த்­துக்­கொள்­ வ­தற்­காக விஷேட குடும்ப காப்பு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தல்.

26. அதி­க­பட்சம் இரண்டு இலட்சம் ரூபா பெறு­மதி வரை அடகு வைத்­துள்ள தங்க நகை­க­ளுக்கு செலுத்த வேண்­டிய அதிக வட்டி மற்றும் தண்ட பணத்தை அகற்­றுதல்.

27. பல்­வேறு நிதி நிறு­வ­னங்­க­ளினால் வழங்­கப்­பட்ட உறுதி, கட­னட்டை திட் டம் மற்றும் பிரமிட் திட்டம் மூலம் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­ன­மை­யினால் சிக்­கி­யுள்ள கட­னுக்கு மேல் கடனை அகற்ற தேவை­யான நட­வ­டிக்கை எடுத் தல்.

28. பெண்­க­ளுக்­ எதிரான வன்­முறை, சிறு வர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்தி பெண்­க­ளுக்கு மற்றும் சிறு­வர்­க­ளுக்கு எமது நாட்டில் சுதந்­தி­ர­மாக வாழும் வகையில் புதிய சட்­டத்தை உரு­வாக்­குதல் மற்றும் சட் ­டத்தை வலு­வாக நடை­மு­றைப்­ப­டுத் தல்.

29. யுத்­தத்தால் வித­வை­­க­ளான அனைத்து சமூக பெண்­க­ளுக்கும் மற்றும் அவர்­களில் தங்கி வாழ்­ப­வர்­க­ளுக்கு விஷேட காப்­புறுதி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத் தல்.

30. அர­சியல் தீர்­மானம் எடுப்­ப­தற்கு பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­ப­தற்­காக மாகாண நிர்­வாக மற்றும் மாகாண சபை­களில் பெண் அங்­கத்­து­வத்தை குறைந்த பட்சம் 25%மாவது இருத்தல் வேண்டும் என்­ப­தனை சட்­ட­மாக்­குதல்.

31. எமது இளை­ஞர்கள் எதிர்நோக்கும் வேலை­யில்லா பிரச்­சி­னையை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்கும் நோக்கில் உள்­நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் மற்றும் சுய தொழில் பத்து இலட்­சத்தை உரு­வாக்கும் வேலைத்­திட்­டத்தை உரு­வாக்­குதல்.

32. இளைஞர் – யுவ­தி­க­ளுக்கு தாம் விரும் பிய கருத்தை முன்­வைக்­கவும் அதனை தெரி­விக்­கவும் மற்றும் அதனை வினைத்­திறன் மிக்­க­தாக உரு­வாக்க சுதந்­தி­ர­மான இளமை காலத்தை அனு­ப­விக்க உள்ள உரி­மையை உறு­திப்­ப­டுத்தல்.

33. இல­வ­ச­மாக இன்­டர்நெட் பெற்­றுக் ­கொ­டுத்தல். பிரதான இடங்களில் ‘வைபை’ பெற்றுக்கொடுத்தல்

34. இளைஞர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பண அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்து இளை ஞர் சமூகம் மற்றும் ஏனைய இளை­ஞர்­ அ­மைப்­புக்­க­ளினால் முன்­வைக்­கப்­படும் இளைஞர் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு செலவு செய்­வ­தற்கு 2015 ஆம் ஆண்­டுக்கு 250 மில்­லியன் ரூபா இளை ஞர் பாரா­ளு­மன்­றத்­திற்கு ஒதுக்­குதல்.

35. கடன் தகவல் பிரிவில் (CRIB) பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்டு கடன் தொல்­லையில் சிக்­கி­யுள்ள சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான வியா­பா­ரிகள் மற்றும் கிரடிட் கார்ட் உரி­மை­யா­ளர்­களை அதி­லி­ருந்து மீட்டு சிறிய நிபந்­த­னை­யு­ட­னான கடன் செலுத்தும் சந்­தர்ப்­பத்தை பெற்­றுக்­கொ­டுத்தல்.

36. நாட்டின் வளர்ச்­சிக்கு அர்ப்­ப­ணிக்கும் உள்­நாட்டு வியா­பார சமூ­கத்­தி­னரை உரு­வாக்­கு­வ­தற்­காக சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான கைத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு சிறிய நிபந்­த­னை­யு­ட­னான இலகு கடன் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தல்.

37. ஏற்­று­ம­தியை அதி­க­ரித்தல் மற்றும் தொழில் வாய்ப்பை அதி­க­ரித்­தலை நோக்­காக கொண்டு GSP+ உத­வியை மீண்டும் பெற்­றுக்­கொ­டுத்தல்.

38. தற்­போது நடாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நிதி நிறு­வ­னங்கள் மற்றும் வங்­கியை ஒன்­றி­ணைக்கும் வேலைத்­திட்­டத்தை மீண்டும் நடை­மு­றைக்கு கொண்டு வருதல்.

39. சிறிய கடன் கட்­டுப்­பாடு செய்தல் மற் றும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சுயா­தீன அதி­கார சபையை உரு­வாக்­குதல்.

40. சிறிய முயற்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­காக அரச பணி­ய­கத்தை ஸ்தாபித்தல்

41. முச்­சக்­கர வண்டி துறைக்­காக முச்­சக்­கர வண்டி உரி­மை­யா­ளர்கள்,வங்கி பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கிய அரச அலு­வ­ல­கத்தை உரு­வாக்­குதல்.

42. வரவு செலவு திட்­டத்தில் இல­வச சுகா­தா­ரத்­திற்கு தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள 1.8% வரை­யான தொகையை 3%மாக அதி­க­ரித்தல்.

43. அரச வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளிக்கு தேவை­யான அனைத்து மருந்­து­களும் குறை­வில் ­லாமல் வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே வழங்­குதல்.

44. அரச வைத்­தி­ய­சா­லை­களில் அறுவை சிகிச்­சைக்­காக பட்­டி­யலில் இணைத்து உள்ள நோயா­ளி­க­ளி­னதும் அறுவை சிகி­ச்­சை­களை பூர்த்தி செய்ய அவ­சர வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத் தல்.

45. அரச வைத்­தி­ய­சா­லை­களில் வெளி நோயாளர் பிரிவை இரவு 10.00 மணி வைரை திறக்க நட­வ­டிக்கை எடுத்தல்.

46. சிறு­நீ­ரக நோய்க்கு மூல காரணி என சந்­தே­கிக்­கப்­படும் களை­நா­சினி வகை, ஏனைய விவ­சாய இர­சா­யன பொருட்­க­ளுக்கு இடைக்­கால தடை விதித்தல் மற் றும் சிறு­நீ­ரக நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு குறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டத்தை வகுத்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தல்.

47. உணவு, அழ­கு­சா­தன பொருட்கள் மற்றும் சேவை, ஔடதம் போன்ற அனைத்து நுகர்வு பொருட்கள் கொள்­வ­ன­வுக்­காக வலு­வான நிறு­வ­கத்தை ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுத்தல்.

48. ஆயுர்­வேத வைத்­திய சேவையை வலுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தல்.

49. அனைத்து மேைலத்­தேய, கீைழத்­தேய மற்றும் தேசிய வைத்­திய முறையை சிறந்த முறையில் ஒன்­றி­ணைத்து ஒன்­றி ­ணைந்த சேவை­யினை மக்­க­ளுக்கு வழங்க தேவை­யான நட­வ­டிக்கை எடுத் தல்.

50. ஹெரோயின், கேரல கஞ்சா, டெபா உள்­ளிட்ட அனைத்து போதை­வஸ்­தை யும் குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் முழு­மை­யாக அகற்ற முன்­னு­ரிமை வழங்­கு தல் மற்றும் தற்­போது போதைப்­பொ­ருட்­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இளை­ஞர்­களை புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்காக நாட­ளா­விய ரீதியில் உட­னடி செயற்­றிட்­டத்தை வெளிநாட்டு உத­வி­யுடன் முன்­னெ­டுத்தல்.
51. போதை­வஸ்து வியா­பா­ரி­களை சுற்­றி­வ­ளைப்­ப­தற்­காக ஒன்­றி­ணைந்த விேஷட படை­ய­ணியை உரு­வாக்­குதல்.

52. புகை­யிலை உற்­பத்தி பொதி­களில் பட ரீதி­யான சுகா­தார எச்­ச­ரிக்­கையை 80% வரை அதி­க­ரித்தல்.

53. கெசினோ அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இர த்து செய்தல்.

54. சுங்க வரி செலுத்­தாமல் மேற்­கொள்­ளப்­படும் எதனோல் வியா­பா­ரத்தை கட்­டுப்­ப­டுத்தல்.

55. தற்­போது இல­வச கல்­விக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள 1.7% வரை­யான ஒதுக்­கீட்டை 6% வரை இலக்கை நோக்கி நகர்­தலை ஆரம்­பித்தல்.

56. உயர் கல்வி அமைச்­ச­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக அதி­காரத்­ து­வத்தை மானி­யங்கள் ஆணைக்­கு­ழு வின் ஊடாக மீண்டும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்து அர­சியல் தீர்­மா­னத்­திற்கு உட்­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தை அதி­லி­ருந்து மீட்டல்.

57. பல்­க­லைக்­க­ழக மஹ­ாபொல புல­மைப்­ப­ரி­சிலை ரூபா 5000 வரை அதி­க­ரித்தல்.

58. உயர் தரத்தில் மூன்று பாடங்கள் சித்­தி­ய­டைந்த அனை­வ­ருக்கும் உயர் டிப்­ளோ­மா­அல்­லது பட்­டப்­ப­டிப்பு வரை கல்­வி­கற்க தேவை­யான அவ­கா­சத்தை வழங்­குதல்.

59. பாட­சா­லை­களில் முதலாம் ஆண்­டுக்கு பிள்­ளை­களை இணைத்­துக்­கொள்ளும் போது சாதா­ரண,முறை­யான திட்­டத்தை உரு­வாக்­குதல். முதலாம் ஆண்­டுக்கு அனு­ம­திக்கும் போது தற்­போது அசா­சா­தா­ர­ணத்­திற்கு ஆளா­கி­யி­ருக்கும் பிள்­ளைக்­க­ளுக்கு உத­வி­ய­ளித்தல்.

60. பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களை உள்­ளீர்க்கும் போது தற்­போது உள்ள தாம­தத்தை முற்­றாக இல்­லாமல் செய்து முதலாம் தவணை ஆரம்­ப­மாகும் போது அனைத்து பிள்­ளை­க­ளுக்கும் பாட­சாலை அனுமதியினைப் பெற்­றுக் ­கொ­டுத்­தலை சான்­றுப்­ப­டுத்தல்.

61. பாட­சா­லை­களில் சம­யத்தை போதிக் கும் சுற்­று­நி­ருபத்தை அனைத்து பாட­சா­லை­க­ளிலும் செயற்­ப­டுத்தல். அவ் வேலைத்­திட்­டத்தை ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு அனைத்து மத பிர­தி­நி­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான குழுவை நிய­மித்தல்.

62. சர்­வ­தேச பாட­சா­லை­களை அரச கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்தல்.

63. மீன்­பிடி படகு, வளை மற்றும் படகு எஞ்­சி­னுக்கு தற்­போது விதிக்­கப்­படும் அதிக வரியை அகற்­றுதல்.

64. வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடல் எல்­லையை கடப்­பதை கட்­டுப்­ப­டுத்தல்.

65. இறைச்சி ஏற்­று­ம­திக்கு அற்­றுப்­போ­யுள்ள ஐரோப்­பிய சந்­தையை மீண்டும் பெற்­றுக்­கொள்­ளுதல்.

66. காற்று மற்றும் கடலில் ஏற்­படும் அசா­தா­ரண நிலை தொடர்பில் சரி­யான தக­வலை உட­ன­டி­யாக மீன­வ­ருக்கு பெற்­றுக்­கொ­டுக்க கூடிய கால­நிலை அவ­தான வேலைத்­திட்­டத்தை தயா­ரித் தல்.

67. மூடப்­பட்­டுள்ள கால்வாய் கட்­ட­மைப்பை மீண்டும் புனர் நிர்­மாணம் செய்தல்.

68. குளங்­களில் உள்ள சேற்றை அகற்­று­தலை ஆரம்­பித்தல்.

69. தற்­போது புல் வெட்ட, வீதி­களை சுத்­தப்­ப­டுத்த, ஓடை­களை சுத்­தப்­ப­டுத்த பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை அதி­லி­ருந்து மீட்டு முப்­ப­டையை இரா­ணுவ வேலைக்கு மாத்­திரம் ஈடுப்­ப­டுத்தல்.

70. அர­சி­யல்­ம­ய­மா­கி­யுள்ள பொலிஸ் பதிவி உயர்வு வழங்கும் முறையை நீக்கி வினைத்­திறன்,இய­லுமை,திறமை,அர்ப்­ப­ணிப்பு மற்றும் செயற்­பாட்டின் பிர­கா ரம் பத­வி­உ­யர்வை வழங்கும் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.

71. உப பொலிஸ் சேவையின் அதி­கா­ரிகள் … சேவைக்கு உள்­வாங்­கப்­படும் போது அது வரை சேவையில் ஈடு­பட்­டி­ருந்த அதி­கா­ரி­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பை நிறை­வு­செய்தல் மற்றும். சேவையின் அதி­கா­ரி­களின் சிரே­ஷ்­டத்­து­வத்தை பாது­காக்க தேவை­யான திட்­டத்தை முன்­னெ­டுத்தல்.

72. அமைச்­சர்கள் மற்றும் அவர்­களின் குடும்­பத்­தி­னரின் பாது­காப்­புக்­காக முப்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்­தலை உட­ன­டி­யாக நிறுத்­துதல் மற்றும் சட்ட முறை­மை­யி­லான பொலிஸ் பாது­காப்பை அவர்­க­ளுக்கு வழங்­குதல்.

73. தோட்­டப்­புற மக்கள் தற்­போது வாழும் வறு­மை­யா­ன ­லயன் அறை வாழ்க்­கை­யி­லி­ருந்து மீட்டு அவர்­க­ளுக்கு காணி உரி­மை­­யுடன் வீட்டு உரி­மையை பெற்­றுக்­கொ­டுத்தல்.

74. பதுளை, நுவ­ரெ­லியா, கண்டி, மாத்­தளை, கேகாலை போன்ற மாவட்­டங்­க ளில் தோட்­டப்­புற மக்­களின் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் மொழி மூலம் உயர் கல்­வியை தொட­ர­க்கூ­டிய வகையில் வச­தி­யுடன் பாட­சா­லை­களை ஆரம்­பித்தல்.

75. சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தமது வீடுகளில் மற்றும் காணி­களில் பல்­வேறு கார­ணி­க­ளுக்­காக வெளியேற்­றப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு தல்.

76. கொழும்பு நகரில் வீடு மற்றும் காணி அப­க­ரிக்­கப்­பட்ட மக்­களின் அச் சொத்தை மீள் மதிப்­பீடு செய்து அதன் பெறு­ம­திக்கு தற்­போது வழங்­கப்படும் வீட்டு கடனில் கழித்தல்.

77. வீட்டு வச­தி­யின்றி வாழும் இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு வீட்டு வசதி வழங்கும் வேலைத்­திட்டம் ஒன்றை ஆரம்­பித்தல்.

78. வடக்­கிலும் தெற்­கிலும் ஜன­நா­யக ரீதி­யான சிவில் நிர்­வா­கத்தை செயற்­ப­டுத்தல்.

79. மத ரீதி­யாக பாகு­பா­டுகள் மற்றும் மத ரீதி­யாக வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை எடுத் தல்.

80. மத வழி­பாட்டு தலங்­க­ளுக்கு தேவை­யான காப்­பு­று­தி­யினை வழங்­குதல்.

81. மத ஒரு­மைப்­பாட்­டுக்­காக செயற்­படும் மற்றும் பிரி­வினை வாதத்­திற்கு எதி­ராக நேர­டி­யாக நட­வ­டிக்கை எடுக்கும் மதத் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய பிர­தேச மற்றும் தேசிய சபையை ஸ்தாபித்தல்.

82. தொல்­பொருள் நிலை­யங்­களை பாது­காத்­த­லுக்­கான வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தல்.

83. ஸ்ரீ தலதா மாளிகை உள்­ளிட்ட புண்­ணிய பிர­தே­சங்­களை அண்­டிய பிர­தே­சத்தில் நடத்­தப்­படும் மது­பான சாலை ­களை அவ்­வி­டத்தில் இருந்து அகற்­று­வ­துடன் அவ் புண்­ணிய பூமியை சுற்­றிகார் பந்­தய போட்டி நடத்­து­வதை உட­ன­டி­யாக நிறுத்­துதல்.

84. திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பௌத்த விகா ரை மற்றும் தேவா­லய சட்­ட­மூ­லத்தில் மாற்­றத்தை கொண்­டு­வ­ருதல்.

85. சம்­பி­ர­தாய பிரி­வென கல்­வியை சர்­வ­தேச மட்­டத்­திற்கு உயர்த்­து­த­லுக்­காக மற்றும் அறி­நெ­றி­பா­ட­சாலை ஆசி­ரி­யர்­களை பயிற்­று­விப்­ப­தற்­காக செயற்­றிட்­டங்­களை ஆரம்­பித்தல்.

86. சர்­வ­தேச பௌத்த பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிப்­ப­தற்கு தேவை­யான அடித்­த­ளத்தை இடுதல்.

87. மிருக வதையை தடுப்­ப­தற்கு சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை.

88. பொருளாதார, சமூக அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் நல்லாட்சி போன்ற துறைகளுக்கு பொருத்தமான மக்கள் அமைப்புகளுக்கு தமது நடவடிக் கையை மேற்கொள்வதற்கு தற்போது உள்ள கட்டுப்பாட்டை அகற்றுதல்.

89. அனைத்து கலைஞர்களின் படைப்பை மதிக்கும் மற்றும் சுயாதீனத்துவத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம் பித்தல்.

90. அனைத்து வெகுசன ஊடகவியலாளர் களின் மற்றும் நிறுவனங்களின் சுதந்தி ரத்தை பாதுகாக்கும் குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை ஆரம் பித்தல்.

91. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதுகாத்தல்.

92. பாராளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தல்.

93. சர்வதேச யுத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன் றம் உருவாக்கிய ரோம் ஒப்பந்தத்திற்கு இலங்கை கையெழுத்து இடாததனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏற்படு மாயின் அதனை தேசிய சுயாதீன நீதி மன்றத்தின் கீழ் மேற்கொள்ளுதல்.

94. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள் ளிட்ட அரசியல் பழிவாங்கல் மற்றும் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு பறி போன பதவிகள் மற்றும் உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்தல.

95. கௌரவமிக்க வெளிநாட்டு சேவையை மீண்டும் ஸ்தாபித்தல்.

96. தேசிய வனாந்தரமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள வனாந்தரங்களை பாதுகாத்தல் அதன் எல்லையை பாது காத்தல்.

97. அழிவடைந்து வரும் பிரதேசங்களை பாதுகாத்தல்.

98. அழிவடைந்து வரும் மற்றும் அழி வடைந்த பிரதேசங்களை பாதுகாக்க நவீன விஞ்ஞான முறைமைகளை பயன் படுத்தி அவற்றை மீண்டும் புனருத்தா ரணம் செய்தல்.

99. மிருக சட்டமூலத்தை பயமின்றி மற் றும் கட்சிபேதமின்றி கடுமையாக நடை முறைப்படுத்தல்.

100. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக முன்னு ரிமை வழங்குதல்.