மகிந்தவின் பக்கமிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், சரத் அமுனுகம, எஸ்.பி.நாவின்ன, விஜித் விஜிதமுனி சொய்சா, ரெஜினோல்ட் குரே, அதாவுட செனவிரத்ன, வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமது ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மகிந்தவின் பக்கம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மைத்திரி பக்கம் தாவிக்கொள்ள தயாராகிவருவதனால் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்னும் பதவியும் இன்னும் ஓரிரு நாளில் பறிபோகும் நிலையில் உள்ளார் .
மேலும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் செயற்குழு தெரிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.