பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலலில் வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்தாமையாலும் சிறைவாசம் அனுபவிப்போர் 1000 பேர் நாடுதழுவிய ரீதியில் விடுவிக்கப்படுகின்றனர்.
இதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிறு குற்றங்களின் கீழ் விளக்கமறியலில் இருந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது விளக்கமறியலில் இருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே. யு.எச்.எம்.அக்பால் தெரிவித்தார்.