வவுனியாவின் பல பகுதிகளில் இன்று உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் பொதுஇடங்கள் மற்றும் சிறுவர் முதியோர் இல்லங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் பல்வேறு தரப்பினராலும் இன்று பொங்கல் பொங்கி தைத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சூரிய பகவானை தை திருநாளிலே வழிபடும் முகமாக அதிகாலையிலே பொங்கலுக்குரிய வேலைகளை முடித்து சூரிய பகவான் காலையில் எழுந்துவரும் வேளையில் பொங்கல் படைத்து விசேட வழிபாடுகள் செய்வது தமிழர் பண்பாடாகும். இன்று நடைபெற்ற தை திருநாள் நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர் .
அந்த வகையில் வவுனியா நெற் இணையமும் தனது வாசகர்களுக்கு தைத் திருநாளாம் இந்நாளில் பொங்குகின்ற பொங்கல் போல தமிழர் வாழ்விலும் சாந்தி, சமாதானம், மகிழ்ச்சி பொங்கிட அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.என தனது வாழ்த்துக்களையும்தெரிவித்துகொள்கிறது.
மேலும் இன்றைய பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் தொடர்பாக வாசகர்கள் எம்மோடு பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஏனைய உங்கள் பார்வைக்கு ..