பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை!!

401

Girl

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின் (23).
பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவித்து நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்த இவர் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இதற்கு அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை அப்படியே ஓவியமாக வரைந்துள்ளார்.

இவரது இச்செயலுக்கு உலகெங்கிலுமுள்ள ஓவியக் கலைஞர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மேலும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அதை பரிசோதித்து பார்க்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என இணையத்தில் பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள், எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் அந்த ஓவியத்தை வரைந்த லீ கூறுகையில், என் குடும்பத்தில் யாரும் இப்படி குழப்பமடையவில்லை. உண்மையில், என் மகளை குழந்தை பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அவரது மகளும் அவரது தந்தைக்கு ஆதரவாக, நானும் ஒரு ஓவியக் கலைஞர் தான். எனது தந்தை ஓவியம் வரைவதற்காக மொடலாக நிற்பது புனிதமான ஒன்று. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் என கூறியுள்ளார்.