கடந்த 14.01.2015 அன்று வவுனியா செட்டிகுளம் வீதியில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
கடந்த 14.01 அன்று அருகாமையில் உள்ள கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற 39 வயதான ஆறுமுகம் ஜேகப் என்ற ஒரு பிள்ளையின் தந்தை வேகமாகச் சென்ற இராணுவ வாகனத்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் இறுதிக் கிரிகைகள் மெனிக் பாம் 2ம் படிவத்தில் நடைபெறவுள்ளது.