கேபி.யை என்ன செய்வது : சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் ஆலோசனை!!

1009

Kumaran-Pathmanathan

கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு ஜேவிபி தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டது.

இதனையடுத்து கேபி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் விஜித் மல்லகொட ஆகிய நீதிபதிகள் மனுவை விசாரித்து மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.

கேபி.யை கைது செய்து நீதின்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 19த் திகதி ஜேவிபி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.