அணில் கும்ளேவின் வனத்துறை அலுவலக விவகாரம் அம்பலம்!

450

anil kumble

இந்திய கிரிகெட் அணியின் புகழ்பெற்ற சுழல் பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அணில் கும்ளேவின் கர்நாடக வனத்துறை அலுவலகமானது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அணில் கும்பளே ஒரு காலத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்ந்தவர். தற்போது கர்நாடக வனத்துறையின் வன விலங்குகள் வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கின்றார்.

இவருக்கான அலுவலக அறையை கர்நாடக அரசானது மக்களின் பணத்திலிருந்து வாரியிறைத்து கட்டியுள்ளது.

பெங்களூர் வி.வி.டவர்ஸில் இந்த ஆடம்பர அலுவலக அறையானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் கதிரை, நாற்காலி, உள்ளிட்ட தளபாடங்களுக்காக 3 லட்ச இந்திய ரூபாவை செலவழித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த அலுவலக அறைக்கு 20 இலட்சத்தை கர்நாடக அரசானது செலவிட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசானது தன்னிடம் பணம் இல்லை என்று பல்வேறு துறைகளிடம் பணம் பெற்று வருகின்றது.

மேலும் மும்பை விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஜீப்புகளை நன்கொடையாக வாங்கியுள்ளனர்.

இவ்வாறு இருக்கும் போது கும்ளே என்றாவது ஒரு முறை வந்து போகும் அலுவலகத்திற்கு கர்நாடக அரசானது இவ்வளவு பணம் செலவழித்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று ஆர்டிஐ சேவகர் கூறியுள்ளார்.