வவுனியாவில் தீயில் எரிந்து பெண் பலி : கணவன் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில்!!(படங்கள்)

578

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (27.01) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தீயில் எரிந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்த நிலையில் அவரது கணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் கணவனும் மனைவியும் பலத்த தீக் காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன் நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவி மரணமடைந்துள்ளார்.

வவுனியா உக்கிளாங்குளத்தைச் சோந்த கஜேந்திரன் சுதாஜினி (28) என்ற பெண்ணே மரமடைந்துள்ளதுடன் அவரது கணவனான பாலசந்திரன் கஜேந்திரன் (40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மரணமடைந்த குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் வந்தவர் என தெரியவருகின்றது. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

sucide 1 012 3