ஷிராணி பண்டாரநாயக்க சம்பிரதாயபூர்வமாக ஓய்வுபெற்றார் : புதிய நீதியரசராக கே.ஸ்ரீபவன்!!

294

shirani_sripavan

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க நேற்று மீண்டும் தனது கடமைகளை பொறுபேற்றதுடன் இன்று ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாது அவரை பதவியில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில் கடந்த அரசாங்கம் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ்சை நியமித்தது. அவரது நியமனம் சட்டவிரோமானது என அறிவிக்கப்பட்டுள்ளதால், மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுப்படி தன்மை குறித்து தற்போது பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளார்.