தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவமான இளவரசன்- திவ்யா காதல் கதை சம்பவம் படமாகிறது. வாச்சாத்தி என்ற கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் கொடுமையை படமாக எடுத்தவர் ஆர்.ரமேஷ்.
இவர் அடுத்து தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் கதையை சினிமாவாக எடுக்க போகிறார். இந்தப் படத்துக்கு இலக்கணம் இல்லா காதல் என்று தலைப்பிட்டுள்ளார். இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா.
இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள்.
வாச்சாத்தி படம் போலவே இப்படமும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்.ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் தான் படமாக்குகிறார்கள்.