வவுனியா கூமாங்குளம் வித்திவினாயகர் வித்தியாலயத்தில் மூத்த பிரஜைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(31.01) நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் ப.உதயராசா, சமுர்த்தி பணிப்பாளர் திருமதி சந்திரகுமார், கூமாங்குளம் வித்திவினாயகர் வித்தியாலய அதிபர் திரு.தர்மகடாசம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான திரு ப.தர்மலிங்கம், திரு.ஜோர்ச் வாஷிங்டன், வைத்தியர் மதிதரன் உட்பட பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பிரதேசத்தைச் சேர்ந்த பல மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர்.