வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை!!

494

Omanthai

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைள் இன்று நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அங்கிருக்கும் சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சோதனைச் சாவடி ஊடாக பயணிக்கும் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இருந்தும் வடபகுதியிலிருந்து இரும்பு கொண்டு செல்லும் வாகனங்களின் விவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் வடபகுதிக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.