மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா போன்ற தோற்றத்தில் சித்தரித்து வைக்கப்பட்ட பனருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் திகதி மதுரை உத்தங்குடி பேருந்து நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.
அந்த பேனரில், இந்திய வரைபடத்திற்குள், சிங்கத்தின் மேல் குஷ்பூ பாரத மாதா உருவத்தில் கையில் தேசிய கொடியுடன் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்துள்ளது.
இத்தனை நாட்களாக இந்த பனரில் இருப்பது குஷ்பூதான் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், நேற்று இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதித்ததற்காக காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. துணைத்தலைவர் ஹரிகரன் புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
பின்னர், இந்த புகாரையடுத்து, சர்ச்சைக்குரிய பேனரை காவல்துறையினர் தற்போது அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.