நடிகை ரம்பா வீட்டில் நகைகள் 4.5 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

634

Ramba

பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரம்பாவின் ஐதராபாத் வீட்டில் 4.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்பாவிற்கு சென்னை மற்றும் ஐதராபாத்தில் வீடுகள் உள்ளன.

இந்நிலையில் அவரது ஐதராபாத் வீட்டில் உள்ள பீரோவில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த நகைகள் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் வசிக்கும் ரம்பாவின் அண்ணன் வெளியே சென்று இருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து பொலிசில் புகார் மனு அளித்துள்ள ரம்பா சகோதரர் சீனிவாஸ், வீட்டில் இருந்த எனது தங்கை ரம்பாவின் நகைகளை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு 4.5 கோடி ஆகும்.

இந்த நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து என்னிடம் 1 கோடி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளதால் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.