கர்ப்பிணியான தனது தாயை துப்பாக்கியால் சுட்ட 3 வயதுக் குழந்தை!!

274

அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணியான தாயையும், தந்தையையும் 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூமெக்சிக்கோவில் நடந்த இந்த சம்பவத்தில், 3 வயது மகன் தனது தாயின் கைப்பையில் பாடல்களை கேட்க ஐபாட் ஐ தேடியுள்ளான்

ஆனால் கையில் துப்பாக்கி கிடைத்ததும் விளையாட்டாக தந்தையை நோக்கி சுட்டுள்ளான். இதில் தந்தையின் பின்புறத்தில் நுழைந்த குண்டு இடுப்பு வழியாக வெளியேறி கர்ப்பிணி தாயின் கையை சுட்டது.

தற்போது குண்டடிப்பட்ட பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்திற்கு காரணமான துப்பாக்கியை கையகப்படுத்திய பொலிசார், அசம்பாவிதத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சிறுவனும் அவனது 2 வயது தங்கையும் 48 மணி நேரத்திற்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப நல துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பெற்றோர்களின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் துப்பாக்கியை சொந்தமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், அது குழந்தைகளிடம் அகப்படாதவாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

B2 B3 B1