வன்னிப் படைத்தளம் அமைந்துள்ள வவுனியாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்றய தினம்(07.02) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் இன்று பிற்பகல் 2.15 அளவில் வன்னி ஜோசப் விமானப்படை தளத்திற்கு விசேட கெலி மூலம் வருகைதந்திருந்தார்.
வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேராவினால் விமானப்படைத்தளத்தில் வைத்து வரவேற்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வன்னி இராணுவ தலைமையகத்தில் இராணுவ மாியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இராணுவ அதிகாரிகளுடன் கூட்டமொன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து வன்னி இராணுவத்தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உணவக கட்டிடமொன்றினையும் உத்தியோகபூர்வமாக அவர் திறந்து வைத்தாா்.