வவுனியாவில் தொடரும் மழை : அறுவடை நடவடிக்கைகள் பாதிப்பு!!(படங்கள், காணொளி)

587

வவுனியாவில்  மீண்டும் இன்று பிற்பகல் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது .வானம் இருட்டிய வண்ணம் பிற்பகல் மூன்றுமணி முதல் தொடர்சியாக மழை பெய்து வருகின்றது . கடந்த தைப்பூச (03/02/2015) தினத்தன்று தொடங்கிய மழையானது  இரண்டு நாட்கள் பெய்து ஓய்ந்த பின்பு மீண்டும்  இன்றுமுதல் பெய்ய தொடங்கியுள்ளது.இதன் காரணமாகஅறுவடைக்கு தயாரான  விவசாயிகள்  பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 தொடர்ந்து பெய்து வரும்  மழை  காரணமாக  வவுனியாவின் பல பகுதிகளிலும்  நெல் அறுவடை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. தொடரும்  மழை  காரணமாக  விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு  முகம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அறுவடை காலத்தில்  இவ்வாறு   மழை பெய்வதனால்  இம்முறையும் விளைச்சலில் எதிர்பார்த்த அளவு சாகுபடி கிடைக்கும் என்பதில் ஐயம்  நிலவுவதாக விவசாயிகள்  தெரிவிக்கின்றனர் .

10961944_959144997438787_1476974647_n 10965415_959145020772118_1604625612_n 10967680_959144960772124_1924391837_n 10979314_959144977438789_851025797_n