உலகில் சிறந்த கல்வித் திட்டம் உள்ள நாடாக இலங்கை மாற்றப்படும் : ஜனாதிபதி!!

1175

உலகில் சிறந்த கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ள நாடாக இலங்கையை மாற்றி அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையில் செய்யப்பட வேண்டிய அனைத்து மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை ரோயல் கல்லூரி பொன்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் ஒப்படைத்தார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் தனது பிள்ளைகள் போல கவனித்து பொறுப்புக்களை நிறைவேற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சவால்களை எதிர்கொண்டு சிறு வயதில் இருந்தே பிரச்சினைகளுக்கு தீர்வுபெறும் வகையில் பிள்ளைகளை பழக்கிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

M1 M2