கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரை தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (10.02) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நெளும் பொக்குன (தாமரை தடாக) கட்டிடம் அமைக்கப்பட்ட பின் அதற்கு முன்பாக இருந்த ஆனந்தகுமார சுவாமி மாவத்தை நெளும் பொக்குன மாவத்தையாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த பெயர் மாற்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பெயர்மாற்ற நிகழ்வில் அமைச்சர்களான கரு ஜயசூரிய, விஜேதாஸ ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன், நந்திமித்ர ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.