வவுனியாவில் அதிகாலைவேளையில் வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை : நகைகள் திருட்டு!!

392

robbery-1

அதிகாலை வேளையில்  வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 7 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வவுனியா உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சின்னப்புதுக்குளத்தில் இன்று 10-02-2015 அதிகாலை 01.30 மணியளவில் மேற்படி திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது இன்று அதிகாலை சந்திரா ஞானப்பிரகாசம் என்பவரது வீட்டின் கதவை உடைத்த திருடர்கள் வீட்டிலிருந்த தாயையும் மகனையும் கட்டிபோட்டு அவரிடம் இருந்த 7 பவுண் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.இன்று அதிகாலை வேளை  நல்ல மழை பெய்து கொண்டிருந்தமையால்  திருடர்கள் வந்து போனமை தொடர்பாக அயலவர்கள் அறிந்திருக்கவில்லை.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சந்திரா ஞானப்பிரகாசம் தெரிவிக்கையில் திருடர்கள் மூன்றுபேர் முகத்தை மூடி துணியால் கட்டிகொண்டு கையில் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டின் பின் கதவை உடைத்துக்கொண்டு உள்வந்ததாகவும் தன்னையும் மகனையும் கட்டிபோட்டு தங்கநகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

மேற்படி திருட்டு சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.