வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை புனரமைத்து கும்பாபிசேகம் செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள நிலையில் நேற்று(10.02.2015) இரவு முதல் பாலஸ்தானம் செய்வதற்க்கான உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஒன்பது மணிமுதல் பாலஸ்தான அபிசேகங்கள் நடைபெற்று வருகின்றன .
மேற்படி பாலஸ்தான நிகழ்வில் அடியார்கள் பங்கு பற்றி முருகபெருமானின் அருளை பெறுவதோடு நின்று விடாமல் கோவிலை புனரமைப்பு செய்தவதற்கு உங்களது தாராளமான திருப்பணி உதவிகள் செய்து கும்பாபிசேக நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவிக்கின்றனர் .
ஆலய புனரமைப்புக்கு தேவையான திருப்பணிகளில் பங்கெடுக்க விரும்பும் அடியார்கள் கோவில் காரியாலயத்துடன் அல்லது 0242222445 என்னும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் .