வவுனியா கந்தசுவாமி கோவில் பாலஸ்தான விஞ்ஞாபன அபிசேகமும் திருப்பணிக்கான அறைகூவலும் (படங்கள்)

818

வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம்  கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை  புனரமைத்து கும்பாபிசேகம்  செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள  நிலையில் நேற்று(10.02.2015) இரவு முதல் பாலஸ்தானம்  செய்வதற்க்கான உற்சவங்கள்  நடைபெற்று வருகின்றன. இன்று காலை ஒன்பது மணிமுதல் பாலஸ்தான அபிசேகங்கள் நடைபெற்று வருகின்றன .

மேற்படி பாலஸ்தான நிகழ்வில் அடியார்கள் பங்கு பற்றி முருகபெருமானின் அருளை பெறுவதோடு  நின்று விடாமல் கோவிலை புனரமைப்பு செய்தவதற்கு உங்களது தாராளமான  திருப்பணி உதவிகள்  செய்து கும்பாபிசேக நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர்  தெரிவிக்கின்றனர் .

 ஆலய புனரமைப்புக்கு  தேவையான  திருப்பணிகளில் பங்கெடுக்க விரும்பும் அடியார்கள் கோவில் காரியாலயத்துடன் அல்லது 0242222445  என்னும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் .

17884_737544219692239_6962415112176283532_n 603716_737544399692221_5791012955936486616_n 10968443_10153178494087384_8944768018576667518_n 10980750_10153178494377384_7131227783723093119_n 10985521_737544046358923_5268252064455222585_n 10991260_737544169692244_7685404554670252530_n

10933843_1541632929426460_4429445125988219632_n

10988533_10153178494597384_7568637474464133941_n