4 வயது மகனை கத்தியால் குத்தி தூக்கில் தொங்கிய தாய்!!

770

CRIME

தனது நான்கு வயது மகனை கத்தியால் குத்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெயங்கொட – தடகமுவ பகுதியில் இன்று (12.02) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக் குத்துக்கு இலக்கான நான்கு வயது சிறுவன் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 31 வயதுடைய தாயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த மற்றுமொரு சிறுவன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.