வட மாகாண சபையின் பிரேரணையை மீளப் பெற வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!

774

14761905521

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டார்.