இந்தியருக்கு நேர்ந்த கொடுமை : பரபரப்பு வீடியோ!!

527

VIஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் திகதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார்.

அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு இந்திய–அமெரிக்க சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சுரேஷ் பாய் படேலை இந்த நிலைக்கு ஆளாக்கிய பொலிஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில் தொடர்புள்ள பொலிஸ் அதிகாரி, விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.