உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு காத்திருக்கிறது.
இலங்கை அணியில் அணித்தலைவர் மத்யூஸ், முன்னாள் அணித்தலைவர்கள் சங்கக்கார, ஜெயவர்த்தன, திரிமன்ன, திசர பெரேரா, மலிங்க போன்ற சிறந்த வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுக்கும் நிலையில் இருக்கின்றனர்.
சொந்த மண்ணில் விளையாடுவது நியூசிலாந்து அணிக்கு கூடுதல் பலமாகும். மேலும் அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. அதனால் இந்த நம்பிக்கையுடன் இலங்கை அணியை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வெற்றிக் கணக்குடன் தொடங்க காத்திருக்கிறது.
அந்த அணியில் அணித்தலைவர் மக்குல்லம், ரோஸ் டெய்லர், வில்லியம்சன், அண்டர்சன், ரோஞ்சி போன்ற துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். அதேபோல் மிலின், போல்ட், மில்ஸ், வெட்டோரி, போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.