வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் குளவி கொட்டியதில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது பாடசாலை கட்டிடத்தில் இருந்த குளவி தாக்கியுள்ளது.
இதன் காரணமாக பல ஆசிரியா்கள் மாணவர்கள் குளவியின் தாக்கத்திற்கு உள்ளாகியபோதிலும் அதிபர் உட்பட உப அதிபர் மற்றும் மாணவியொருவருக்கு அதிகமாக குளவி குத்தியதில் வவுனியா பொது வைத்தியிசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் பாடசாலை அதிபர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் மற்றைய இருவரும் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் பாடசாலைகளில் குளவிகள் தாக்கிய மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் காயமடைந்து வருகின்றமை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.