இந்தியாவைச் சென்றடைந்த மைத்திரியை வரவேற்ற மோடி : காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி!!

443

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் மைத்திரி சந்திக்கிறார். இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவாத்தையும் இடம்பெறவுள்ளது.

காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் மைத்திரி

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

மனைவி மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளோடு காலை ராஜ்காட் சென்ற சிறிசேன, காந்தி சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்ற சிறிசேனவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஜனாதிபதி சிறிசேனவுக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

1 2 3