வவுனியா 4ம் ஒழுங்கை காத்தார்சின்னகுளம் வீதி, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் துரைராசா அகிலன் (46) என்பவரது வீடு (16.02) நேற்று நெருப்பினால் எரிந்து சாம்பலானது
இந்த அனர்த்தத்தால் அவரது உடைமைகள், பிள்ளைகளின் ஆடைகள், கற்றல் உபகரணங்கள் உட்பட எல்லாம் எரிந்து நாசமாகியது.
இவர்களின் நிலைமைகளை கண்ணுற்ற ஊடகவியலாளர்கள், தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களுக்கு தெரிவித்ததையடுத்து உதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
பின்னர் கனடாவில் வசிக்கும் ராம் சிவா அவர்களின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களையும், பிள்ளைகளுக்கு புத்தகப்பை, கற்றல் உபகரணங்கள் உட்பட ஒரு தொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உதவிகளை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் வழங்கி வைத்தனர். படுப்பதற்கு இடம் இல்லாது நிர்கதியாகி உள்ள இக் குடும்பத்திற்கு நல்ல மனம் கொண்ட அனைவரும் உதவ முன் வரவேண்டும் என தமிழ் விருட்சம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.