வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து தழிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.