கவலையுமில்லை, மகிழ்ச்சியுமில்லை : சம்­பந்தன்!!

455

samanthan

இலங்கை மீதான யுத்­தக்­குற்ற விசா­ரணை அறிக்­கையை பிற்­போ­டு­வ­தற்கு சர்­வ­தேச மனித உரி­மைகள் பேரவை மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கவ­லை­ய­டை­யவும் இல்லை. அதே­நேரம் இதில் மகிழ்ச்சி கொள்­வ­தற்கும் ஒன்றும் கிடை­யாது என்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பாரிய மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கையை செப்­டெம்பர் மாதம் வரை பிற்­போ­டு­வ­தற்கு பேரவை தீர்­மா­னித்­தி­ருப்­பது தொடர்­பி­லேயே சம்­பந்தன் மேற்­கண்டவாறு தெரி­வித்­துள்­ள­தாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இது தெடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிப்பு விவ­காரம் பிற்­போ­டப்­பட்­டி­ருக்­கின்ற காலப்­ப­கு­தியில் மேலும் பல புதிய விடயங்­களை விசா­ர­ணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பிப்­ப­தற்கு வழி­வ­குத்­துள்­ளது என்று கூற­வேண்டும்.

அந்த வகையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு நாம் எமது ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கவேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. எப்­படி இருப்­பினும் பேர­வையின் தீர்மானம் எமக்கு எந்த வித கவலையையும் தரவில்லை என்பது போல் மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.