வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது!!

462

A6

வவுனியாவில் இடம்பெற்ற சில வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை தாம் கைது செய்து வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கடந்த 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். இதனுடன் தொடர்புடைய வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளோம்.

அவர்களிடம் இருந்து இரண்டு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பாக தீவிர விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.