சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த 35 தமிழர்கள் மாத்தறையில் கைது!!

461

Sea

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் 35 பேர் மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வெலிகம பொலிஸின் கடற்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல இருந்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்கள் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மாங்குளம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

படகில் இருந்த உணவுப் பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.