உலகெங்கிலுமுள்ள பல கோடி சைவ மக்களால் சிவன் இராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்பட்டிருக்கிறது. விரதமிருந்து, இரவிரவாக தூக்கம் கலைந்து, உள்ளம் உருகி, வேண்டி நின்றால் கேட்ட வரத்தினை அவன் தருவான் என்பது சிவன் அடியார்களின் நம்பிக்கை.
அந்த வகையில் வவுனியா உக்குளாங்குளம் சிவன் கோவிலில் சிவன் இராத்திரி நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றன. தமிழருவி சிவகுமாரின் சொற்பொழிவைத் தொடர்ந்து குரும்பையுர் ஐங்கரனின் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது.
கவிஞர்களான வே.முல்லைத்தீபன், வன்னியுர் நிஸான், தமிழாசிரியர் வரதன், மாணிக்கம் ஜெகன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
நடுச்சாம வழிபாடுகளைத்தொடர்ந்து நடைபெற்ற இக்கவியரங்கம் நிறைவடைய அதிகாலை வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின் சிவராத்திரி நிகழ்வுகளும் இனிதே நிறைவடைந்தன.